ஆண் சிசுவை கழிவறையில் வீசிச் சென்ற தாய் : தாயை தேடும் பணி தீவிரம்

ஆந்திர மாநிலம் சித்தூரில் பிறந்து சில நிமிடங்களே ஆன ஆண் சிசுவை கழிவறையில் தாயே வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆண் சிசுவை கழிவறையில் வீசிச் சென்ற தாய் : தாயை தேடும் பணி தீவிரம்
x
ஆந்திர மாநிலம் சித்தூரில் பிறந்து சில நிமிடங்களே ஆன ஆண் சிசுவை கழிவறையில் தாயே வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சித்தூர் மாவட்டம் குடிபாலா பகுதியில் உள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் ஒருவர் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் திடீரென அந்த குழந்தையை மருத்துவமனையின் கழிவறையில் போட்டுவிட்டு அந்த பெண் தப்பிச் சென்றார். குழந்தையின் அழுகுரல் கேட்ட ஊழியர்கள் அங்கு சென்று குழந்தையை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பெற்ற குழந்தையை வீசிச் சென்ற தாய் யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்