மாயமான மலையேற்றக் குழுவினரை தேடும் பணி தீவிரம் : ஹெலிகாப்டர் குழு, துணை ராணுவ படையினர் தீவிரம்

மாயமான இந்தியர் உள்பட 8 பேரை தேடும் பணியில், இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப் படையை சேர்ந்த 4 பயிற்சி பெற்ற மலையேற்ற வீரர்கள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
மாயமான மலையேற்றக் குழுவினரை தேடும் பணி தீவிரம் : ஹெலிகாப்டர் குழு, துணை ராணுவ படையினர் தீவிரம்
x
இமயமலை சிகரங்களான நந்தா தேவி மற்றும் நந்தா தேவி கிழக்கில் மலையேற்றத்தின் போது மாயமான இந்தியர் உள்பட 8 பேரை தேடும் பணியில்,  இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப் படையை சேர்ந்த 4 பயிற்சி பெற்ற மலையேற்ற வீரர்கள் தற்போது ஈடுபட்டுள்ளனர். அவர்கள் நான்கு பேரும் 20 ஆயிரம் அடி உயரத்தில் நந்தா தேவி கிழக்கு சிகரம் அருகே மாயமானவர்களை தேடும் பணிக்காக இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் அங்கு இறக்கி விடப்பட்டு உள்ளனர். இதேபோன்று பித்ரோகரில் இருந்து காலை 5 மணிக்கு புறப்பட்ட ஒரு ஹெலிகாப்டரில் புறப்பட்ட குழுவினரும், மாயமான 8 பேரை  தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்