முதலமைச்சர் கமல்நாத் தலைமையில் ரம்ஜான் தொழுகை : பூக்கள் கொடுத்தும், மலர்தூவியும் வாழ்த்து

ரம்ஜான் விழாவை முன்னிட்டு, மத்திய பிரதேச மாநிலம் போபாலில், முதலமைச்சர் கமல்நாத், இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
முதலமைச்சர் கமல்நாத் தலைமையில் ரம்ஜான் தொழுகை : பூக்கள் கொடுத்தும், மலர்தூவியும் வாழ்த்து
x
ரம்ஜான் விழாவை முன்னிட்டு, மத்திய பிரதேச மாநிலம் போபாலில், முதலமைச்சர் கமல்நாத், இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். கமல்நாத் தலைமையில், அங்கு சிறப்புத் தொழுகை கூட்டம் நடைபெற்றது. இதில், இஸ்லாமிய தலைவர்கள் முதல், ஏராளமானோர் பங்கேற்றனர். தொழுகை கூட்டம் நிறைவடைந்த பின்னர், முதலமைச்சர் கமல்நாத்திடம் ரோஜா பூ கொடுத்து, இஸ்லாமியர்கள் வாழ்த்து பெற்றனர். அவர்களின் மீது பூக்களை தூவி, கைகுலுக்கிய கமல்நாத், சிறுவர்களை கொஞ்சி மகிழ்ந்து வாழ்த்து தெரிவித்தார். புத்தாடை அணிந்து தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள், நீண்ட வரிசையில் நின்று கமல்நாத்துக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்