பனிப்புயலில் சிக்கிய மலையேற்றக் குழுவினர் : 5 பேரின் உடல் கண்டுபிடிப்பு - 8 பேர் மாயம்

இமயமலைத் தொடரில் 25 ஆயிரத்து 643 அடி உயரத்தில் உள்ள நந்தா தேவி மற்றும் நந்தா தேவி கிழக்கு ஆகிய இரண்டு சிகரங்கள் தான் மலையேற்ற வீரர்களுக்கு மிகவும் சவாலானதாக உள்ளன.
பனிப்புயலில் சிக்கிய மலையேற்றக் குழுவினர் : 5 பேரின் உடல் கண்டுபிடிப்பு - 8 பேர் மாயம்
x
இமயமலைத் தொடரில் 25 ஆயிரத்து 643 அடி உயரத்தில் உள்ள நந்தா தேவி மற்றும் நந்தா தேவி கிழக்கு ஆகிய இரண்டு சிகரங்கள் தான் மலையேற்ற வீரர்களுக்கு மிகவும் சவாலானதாக உள்ளன. இந்நிலையில், கடந்த வாரம் வீசிய பனிப்புயலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு இந்தியர் உள்பட 8 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. வான்வெளியாக நடத்திய தேடுதல் வேட்டையில், 5 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக பித்ரோகர் மாவட்ட ஆட்சியர் விஜயகுமார் ஜோகதந்தா தெரிவித்துள்ளார். மீண்டும் பனிப்புயல் ஏற்பட்டால் தேடுதல் வேட்டையில் தொய்வு ஏற்படும் என கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்