புதுச்சேரி நிர்வாகத்தில் யாருக்கு அதிகாரம்..? - கிரண்பேடி தொடர்ந்த வழக்கு இன்று விசாரிப்பு

அதிகார ஆளுமை தொடர்பாக புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
புதுச்சேரி நிர்வாகத்தில் யாருக்கு அதிகாரம்..? - கிரண்பேடி தொடர்ந்த வழக்கு இன்று விசாரிப்பு
x
அதிகார ஆளுமை தொடர்பாக புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. கிரண்பேடி, புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக நியமனம் ஆனதில் இருந்து,  நிர்வாகத்தில் யாருக்கு அதிகாரம் என்பதில், முதலமைச்சர் நாராயணசாமியுடன் மோதல் ஏற்பட்டது. யார் சொல்வதை கேட்பது என்பதில், அதிகாரிகளுக்கு சிக்கல் உள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நிர்வாக விவகாரத்தில் கிரண்பேடி தலையிடக் கூடாது என தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், கிரண்பேடி மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மனு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்