தலைநகரில் தலைவிரித்தாடும் வெப்பம்

நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் கடந்த சனிக்கிழமை முதல் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தலைநகரில் தலைவிரித்தாடும் வெப்பம்
x
நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் கடந்த சனிக்கிழமை முதல் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம், 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி வானிலை மண்டல இயக்குநர் குல்தீப் ஸ்ரீ, நேற்று அதிகபட்சமாக 47 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவானதாக கூறினார். டெல்லியைப் பொறுத்தவரை மதியம் ஒரு மணி முதல் 4 மணி வரை அதிகபட்ச வெப்பநிலை பதிவாகிறது எனவும் இந்த நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்