வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள கல்லூரியில் தீ விபத்து

ஆந்திர மாநிலம் சித்தூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள தனியார் கல்லூரியில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள கல்லூரியில் தீ விபத்து
x
ஆந்திர மாநிலம் சித்தூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள தனியார் கல்லூரியில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி  நடைபெற்றது.  இதனையொட்டி சித்தூர் மாவட்டத்தில்  பதிவான வாக்கு இயந்திரங்கள்   இரண்டு தனியார் கல்லூரிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள முருகம்பட்டு   தனியார் கல்லூரியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். தீ விபத்தால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு எந்த பாதிப்பும் இல்லை என சித்தூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்