"வாக்கு எண்ணிக்கையில் வெளிப்படைத்தன்மை வேண்டும்" : ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை

மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்பட வேண்டும் என 21 எதிர்கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
வாக்கு எண்ணிக்கையில் வெளிப்படைத்தன்மை வேண்டும் : ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை
x
டெல்லியில், இந்திய தேர்தல் ஆணையரை, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள், மனு ஒன்றை அளித்துள்ளன. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, வாக்கு எண்ணிக்கை வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்ததாக கூறினார். மேலும், வாக்கு எண்ணிக்கை முடிவுகளை, அவ்வப்போது, தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும், அவர் வேண்டுகோள் விடுத்ததாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்