ரபேல் - புதிய பிரமாண பத்திரம் தாக்கல்

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
x
ரபேல் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் 36 ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம் தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பரில் உச்ச நீதிமன்றம்  அளித்த தீர்ப்பு சரியானது எனவும் அதை மறு ஆய்வு செய்ய அவசியமில்லை எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், ஊடகங்களில் வெளியான ஒரு பகுதி தகவல்களை மட்டுமே அடிப்படையாக கொண்டு ரபேல் விவகாரத்தை மறு ஆய்வு செய்ய தேவையில்லை என்றும் பிரமாண பத்திரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. உள்நோக்கத்தோடு திருடப்பட்ட சில ரகசிய ஆவணங்களை ஆதாரமாக எடுத்து கொள்ள வேண்டியதில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்