புயல் தாக்கத்துக்கு இடையே பிறந்த குழந்தை 'ஃபானி'...

புயல் தாக்கத்துக்கு இடையே புவனேஸ்வரில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஃபானி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
x
ஒடிசா  தலைநகர் புவனேஸ்வரில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் இன்று காலை 11.03 மணிக்கு, 32 வயதான பெண் ஒருவர் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அந்த குழந்தைக்கு ஃபானி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ரயில் பெட்டி பராமரிப்பு தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் அந்த பெண்ணும், குழந்தை ஃபானியும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்