சந்திராயன் II : ஜூலை 9 - 16க்குள் விண்ணில் பாயும்
நிலவுக்கு, சந்திராயன்-2 செயற்கைகோளை ஜூலை மாதத்தில் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவுக்கு, சந்திராயன்-2 செயற்கைகோளை ஜூலை மாதத்தில் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதற்கான ஆயத்த பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக கூறியுள்ள இஸ்ரோ, ஜூலை 9 முதல் 16ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களில் ஜி.எஸ்.எல்.வி. எம்.கே.3 ராக்கெட் மூலம் நிலவுக்கு செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்படும் இந்த செயற்கைகோளை, செப்டம்பர் 6 ஆம் தேதிக்குள் சந்திரனில் நிலைநிறுத்த, இஸ்ரோ திட்டமிட்டுள்து. இதனிடையே, சந்திராயன்-2 தொடர்பான பணிகளை முடிக்க கூடுதல் நாட்கள் ஆகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Next Story