ஜிஎஸ்டி வசூல் ரூ.1.13 லட்சம் கோடி...முதல் முறையாக அதிகபட்ச வரி வசூல்

ஜிஎஸ்டி வசூல் ஏப்ரல் மாதத்தில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் கோடி ரூபாய் தொட்டுள்ளது.
ஜிஎஸ்டி வசூல் ரூ.1.13 லட்சம் கோடி...முதல் முறையாக அதிகபட்ச வரி வசூல்
x
ஜிஎஸ்டி வசூல் ஏப்ரல் மாதத்தில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் கோடி ரூபாய் தொட்டுள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்னர் முதல் முறையாக மிக அதிகபட்ச வரி வசூல் எட்டப்பட்டுள்ளது. இதுவரை ஒட்டுமொத்தமாக 5 முறை மட்டுமே 1 லட்சம் கோடி ரூபாய் வரி வசூல் எட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக நிதியமைச்சகம் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூல் 1 லட்சத்து 13 ஆயிரம் கோடி ரூபாயில், மத்திய அரசுசின் பங்காக 21 ஆயிரத்து 600 கோடி ரூபாயும், மாநில அரசின் பங்காக 28 ஆயிரத்து 800 கோடி ரூபாயும் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்