டீ கடையில் வேலை பார்ப்பவர்களுக்கு தங்க மோதிரம் - தொழிலாளிகள் நெகிழ்ச்சி

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தனது டீ கடையில் வேலை பார்க்கும் தொழிலாளிகளுக்கு நட்சத்திர ஓட்டலில் விருந்து வைத்து, அவர்களுக்கு தங்க மோதிரம் பரிசளிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார் டீ கடை உரிமையாளர் ஒருவர்.
x
கேரளாவை சேர்ந்த சுகுமார், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்து டீ கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு கடினமாக உழைத்து, டீ கடை உரிமையாளராக உயர்ந்துள்ளார். அதன் பின் படிப்படியாக உயர்ந்து இன்று சென்னையில் மட்டும், 5 டீ கடைகளுக்கு உரிமையாளராக உள்ளார் சுகுமார்.... அவரது டீ கடைகளில் 45 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். டீ கடையில் வேலை பார்த்தபோது அவர் பட்ட துன்பங்கள், தனது கடையில் வேலை பார்ப்பவர்கள் யாருக்கும் ஏற்பட்டுவிட கூடாது என்பதில் உறுதியாக இருந்துள்ளார் சுகுமார்... 


Next Story

மேலும் செய்திகள்