புதுச்சேரி : நிலுவை ஊதியம், போனஸ் கேட்டு அரசு சார்பு நிறுவனங்களின் ஊழியர்கள் போராட்டம்
புதுச்சேரியில் அரசு சார்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் போனஸ், பென்ஷன் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் அரசு சார்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் போனஸ், பென்ஷன் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி மாநிலத்தில் அரசு சார்பு நிறுவனங்களான சுதேசி பஞ்சாலை, பாப்ஸ்கோ, பாசிக் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் தங்களுக்கு நிலுவை ஊதியம் பென்ஷன் , போனஸ் வழங்கக்கோரி 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சுதேசி மில் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story