ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் மீது தாக்குதல்

பிளேடால் தாக்கிய அரக்கோணத்தை சேர்ந்த 2 பேர் கைது
ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் மீது தாக்குதல்
x
திருப்பதி அடுத்த ரேணிகுண்டா ரயில் நிலையத்தில், டிக்கெட் பரிசோதகராக பணிபுரிந்து வரும் உமா மகேஸ்வரனை, பிளேடால் தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரக்கோணத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் விஜயன் சாலையில் சண்டை போட்டு கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த உமா மகேஸ்வரன் மீது பிளேடால் இருவரும் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த உமா மகேஸ்வரனை மீட்ட போலீசார், திருப்பதி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். இதனையடுத்து வெங்கடேஷ் மற்றும் விஜயனை கைது செய்த போலீசார், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்