இந்தியாவின் ஆன்மாவை பாதுகாக்க புத்திசாலித்தனமாக வாக்களிங்கள் - ராகுல்காந்தி

இந்த தேர்தலில் புத்திசாலித்தனமாக வாக்களிக்க, வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவின் ஆன்மாவை பாதுகாக்க புத்திசாலித்தனமாக வாக்களிங்கள் - ராகுல்காந்தி
x
இந்த தேர்தலில் புத்திசாலித்தனமாக வாக்களிக்க, வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டில் ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பும் உருவாகவில்லை, 15 லட்சம் ரூபாய் பணமும் குடிமக்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய ஆட்சியாளர்கள் முத்தாய்ப்பாக சொன்னது போல நல்ல காலமும் வரவில்லை என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மாறாக வேலையிழப்பு, பணமதிப்பிழப்பு, விவசாயிகள் வேதனை, கப்பார் சிங் வரி, சூட் பூட் சர்க்கார், ரபேல் விவகாரம், பொய்கள், நம்பிக்கையின்மை, வன்முறை, வெறுப்பு, பயம் தான் கடந்த காலங்களில் உருவாகி உள்ளதாக தெரிவித்துள்ள ராகுல்காந்தி, இந்தியாவின் ஆன்மாவையும் அதன் அதன் எதிர்க்காலத்தையும் பாதுகாக்க புத்திசாலித்தனமாக வாக்களிக்க வேண்டும் என, வாக்காளர்களை ராகுல்காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்