ம.பி.-யில் தொடரும் வருமானவரி சோதனை

முதல்வரின் சிறப்பு அதிகாரிக்கு நெருக்கமானவர்களுக்கு நெருக்கடி
ம.பி.-யில் தொடரும் வருமானவரி சோதனை
x
மத்திய பிரதேசத்தில் 3வது நாளாக வருமான வரி சோதனை நீடித்து வருகிறது.கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று முதலமைச்சர் கமல்நாத்தின் சிறப்பு அதிகாரி பிரவீன் கக்கார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.போபால் மற்றும் டெல்லியில் நடைபெற்ற இந்த சோதனையின்போது கோடிக்கணக்கில் பணம் மற்றும் ஆவணங்கள் சிக்கியதாகவும் 281 கோடி ரூபாய் அளவுக்கு பணபரிமாற்ற ஆவணங்கள் கிடைத்ததாகவும் கூறப்பட்டது.இந்நிலையில், பிரவீன் கக்காருக்கு நெருக்கமாக உள்ள அஸ்வின் சர்மா என்பவரின் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.வருமான வரி சோதனை நடைபெறுவதால் அஸ்வின் சர்மா வீட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.வனத்துறை குழுவினரும் சோதனையில் இடம் பெற்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்