ரஃபேல் விவகாரம் தொடர்பான வழக்கு

உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் விசாரணை
ரஃபேல் விவகாரம் தொடர்பான வழக்கு
x
ரஃபேல் விவகாரம் தொடர்பான  வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுஆய்வு செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற்றது.மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல்  வேணுகோபால் ரஃபேல் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்திருந்த சி.ஏ.ஜி. அறிக்கையில் முதல் மூன்று பக்கங்கள் விடுபட்டு இருப்பதாகவும், அவற்றை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்..மனுதாரர்கள், சீராய்வு மனுவுடன் தாக்கல் செய்த ரகசிய ஆவணங்களை நீக்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.பின்னர் வாதிட்ட மனுதாரர் பிரசாந்த் பூஷன் , ரஃபேல் விவகாரத்தில் ஆவணங்கள் திருடப்பட்டதாக அரசு கூறும் விவகாரத்தில் இதுவரை எந்த முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யவில்லை என்றார்.இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், வழக்கின்  தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்