சாக்கடை அள்ளிய சட்டமன்ற உறுப்பினர்...

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ அமிதாப் பாஜ்பாய் துப்புரவு பணியாளர்களுடன் சேர்ந்து சாக்கடை அள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டார்.
சாக்கடை அள்ளிய சட்டமன்ற உறுப்பினர்...
x
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ அமிதாப் பாஜ்பாய் துப்புரவு பணியாளர்களுடன் சேர்ந்து சாக்கடை அள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டார். துப்புரவு தொழிலாளர்களை அரசு கண்டுகொள்வதில்லை என குற்றம்சாட்டி அவர் தர்ணாவில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில்  திடீரென சாக்கடை அள்ளும் போராட்டத்தில் அவர் ஈடுபட முயன்றதால், போலீசார் அவரை தடுத்தனர். அப்போது போலீசாருக்கும் எம்.எல்.ஏ ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து எம்.எல்.ஏ பாஜ்பாய் சாக்கடை அள்ளி அரசுக்கு தன் கண்டனத்தை பதிவு செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்