புல்வாமா தாக்குதல் குறித்து விசாரணை நடத்த கோரிய மனு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு
புல்வாமா தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த கோரிய மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
புல்வாமா தாக்குதல் சம்பந்தமாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு, தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 2 கோடி ரூபாய் வழங்க வலியுறுத்தி, உச்சநீதிமன்றத்தில் கே.கே.ரமேஷ் என்பவர், பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு இன்று விசாரித்தது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இது விசாரணைக்கு உகந்த மனு அல்ல என கூறி, தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
Next Story