எம்எல்ஏவை விடுவிக்க மனைவி போராட்டம்

எம்எல்ஏ பாஸ்கர் ரெட்டியை விடுதலை செய்யக்கோரி அவரது மனைவி லட்சுமி, எஸ்பி அலுவலகம் முன்பு 500க்கும் மேற்பட்ட பெண்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
எம்எல்ஏவை விடுவிக்க மனைவி போராட்டம்
x
சித்தூரில் காவல் நிலையம் முன்பு ரகளையில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்ட ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ பாஸ்கர் ரெட்டியை விடுதலை செய்யக்கோரி அவரது மனைவி லட்சுமி, எஸ்பி அலுவலகம் முன்பு 500க்கும் மேற்பட்ட பெண்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். 6 மணி நேரத்துக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்ட லட்சுமி உள்ளிட்ட அனைவரையும் கைது செய்து குண்டுகட்டாக போலீசார் அப்புறப்படுத்தினர். அப்போது பெண்கள் அங்கும் இங்குமாய் ஓடி, கதறி அழுததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்