ராணுவ வீரரின் உடலுக்கு கிராம மக்கள் அஞ்சலி
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த, ராணுவ அதிகாரியின் உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த, ராணுவ அதிகாரியின் உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். தற்கொலைப் படை தாக்குதலுக்கு பிறகு, தேடுதல் வேட்டையின் போது தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ அதிகாரி உள்பட 4 பேர் உயிரிழந்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த ராணுவ வீரர் அஜய்குமாரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது, பல கிலோ மீட்டர் தூரம் சாலையின் இருபுறமும் நின்ற பொது மக்கள், வாகனத்தின் மீது மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினார்.
Next Story