புதுச்சேரியில் மதுபானம் விலை திடீர் உயர்வு...

புதுச்சேரில் கலால் வரி உயர்த்தப்பட்டதால் மது பானங்களின் விலை அதிகரித்துள்ளது.
புதுச்சேரியில் மதுபானம் விலை திடீர் உயர்வு...
x
புதுச்சேரியில் வருமானத்தை உயர்த்துவதற்காக, நேற்று முதல் கலால் வரி அதிகரிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  இந்த வரி உயர்வால், அரசுக்கு 26 கோடி ரூபாய் கூடுதல்  வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், புதுச்சேரியில் ரம், பிராந்தி, விஸ்கி, ஒயின், பீர், ஓட்கா உள்ளிட்ட மதுபானங்களின் விலை உயர்ந்துள்ளது. குறைந்த மற்றும் சாதாரண  மது பாட்டில்கள் குவார்ட்டருக்கு 5 ரூபாயும், உயர்ந்த விலை மதுபாட்டில்கள் 20 ரூபாய் வரையிலும் அதிகரிக்கிறது. 2017ம் ஆண்டுக்கு பிறகு, கலால் வரியை புதுச்சேரி அரசு தற்போது உயர்த்தியுள்ளது

Next Story

மேலும் செய்திகள்