பக்தர் தவற விட்ட பணம் மற்றும் நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்...

திருமலையில் பக்தர் தவற விட்ட நகைகள் மற்றும் பணத்தை மீட்டு உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
பக்தர் தவற விட்ட பணம் மற்றும் நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்...
x
திருப்பதி திருமலைக்கு வந்த பக்தர்  தவற விட்ட 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, பணத்தை போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர். ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியை சேர்ந்த சுப்பிரமணியம் குடும்பத்தினருடன் வாடகை காரில் திருமலைக்கு வந்துள்ளார். அவர் கொண்டு வந்த 3 பைகள் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் அளித்தார். கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் சாரணை மேற்கொண்ட போலீசார் சுப்பிரமணியம் வந்த காரின் பின்புறத்தில் பைகள் இருப்பதை கண்டுபிடித்தனர்.   40 நிமிடத்திற்குள் அவற்றை மீட்டு நகை மற்றும் பணத்தை சுப்பிரமணியத்திடம் போலீசார் ஒப்படைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்