சபரிமலை வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதில் எந்த ஆட்சேபமும் இல்லை என தேவசம்போர்டு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
x
* சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட 54 மனுக்கள் மீதான விசாரணை, அரசியல் சாசன அமர்வு முன்பு நடைபெற்றது. 

* இதில், நாயர் அமைப்பு சார்பில் முதலில் வாதத்தை தொடங்கிய மூத்த வழக்கறிஞர் பராசரன், சபரிமலை கோயில் விவகாரம் தீண்டாமை கிடையாது என்றும்,  அது பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் மரபு மற்றும் மத நம்பிக்கை என்றும் கூறினார். 

* தேவசம் போர்டு சார்பாக வாதிட்டபோது, சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என, உச்சநீதிமன்றத்தில் ​தெரிவிக்கப்பட்டது. 

* இதனையடுத்து, சபரிமலை வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்