ஐதராபாத்தில் வேகமாக பரவும் பன்றி காய்ச்சல் : 330 பேருக்கு சிகிச்சை
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில், பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 330 ஆக உயர்ந்துள்ளது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில், பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 330 ஆக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ஆயிரத்து 656 பேருக்கு பரிசோதனை செய்ததில் 307 பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கடந்த 5 நாட்களில் 246 பேரை பரிசோதித்ததில், 23 பேருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் ஐதராபாத் நகர மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
Next Story