கொல்கத்தா சி.பி.ஐ. அலுவலகத்துக்கு சி.ஆர்.பி.எப். பாதுகாப்பு...

விரும்பத்தகாத நிகழ்வுகளை தவிர்க்க, கொல்கத்தாவி​ல் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு சி.ஆர்.பி.எப். பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கொல்கத்தா சி.பி.ஐ. அலுவலகத்துக்கு சி.ஆர்.பி.எப். பாதுகாப்பு...
x
சாரதா சிட்பண்ட் மற்றும் நிதி திட்ட முறைகேடு ஆதாரங்கள் மாயமானது தொடர்பாக விசாரணை நடத்த, கொல்கத்தா காவல் ஆணையர் இல்லத்துக்கு சென்ற சி.பி.ஐ. குழுவை சேர்ந்த அதிகாரிகளை அம்மாநில போலீசார் சிறை பிடித்து , விசாரணைக்கு பின்னர் விடுவித்துள்ளனர். மேலும் சி.பி.ஐ. இணை இயக்குநரை கைது செய்ய, மேற்கு வங்க போலீசார் அவரது வீட்டு முன் குவிந்ததால் பரபரப்பு உருவானது. இதனிடையே அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டி.ஜி.பி. மற்றும் மாநகர மேயர் ஆகியோர், மாநகர காவல் ஆணையர் இல்லத்தில் முகாமிட்டனர். இதனால் கொல்கத்தா உள்பட மாநிலம் முழுவதும் பதற்றமான நிலை உருவானது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பா.ஜ.க. மற்றும் மத்திய அரசுக்கு எதிராக வீதிக்கு வந்து போராட தொடங்கியுள்ளனர். இதனிடையே, விரும்பத்தகாத நிகழ்வுகளை தவிர்க்க, சி.ஆர்.பி.எப். பாதுகாப்பு கொல்கத்தாவி​ல் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு போடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்