வேலைவாய்ப்பு தொடர்பான புள்ளி விவரம் - அரசு வெளியிடவில்லை என நிதிஆயோக் விளக்கம்

புள்ளி விவரங்கள் சேகரிப்பதில் தற்போது புதிய நடைமுறை உள்ளதாக நிதி ஆயோக் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு தொடர்பான புள்ளி விவரம் - அரசு வெளியிடவில்லை என நிதிஆயோக் விளக்கம்
x
புள்ளி விவரங்கள் சேகரிப்பதில் தற்போது புதிய நடைமுறை உள்ளதாக நிதி ஆயோக் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். தற்போது கணினி உதவியுடன் தனிநபர் நேர்முகம் மூலம் புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், இருவேறு புள்ளி விவரங்களை ஒப்பீடுவது சரியல்ல என்றும் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்தார். வேலைவாய்ப்பு தொடர்பாக வெளியான புள்ளி விவரம் ஆய்வுக்கு உட்படுத்தப்படாதது எனவும், எனவே அது இறுதியானது அல்ல என்றும் ராஜீவ் குமார் கூறியுள்ளார். முறையான ஆய்வுக்கு பின்னர், வேலைவாய்ப்பு தொடர்பான புள்ளி விவரங்களை அரசு வெளியிடும் என்றும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்