ரூ.2 கோடியில் புதுப்பிக்கப்பட்ட பழமையான நூலகம் : முதல்வர் நாராயணசாமி திறந்து வைத்தார்

புதுச்சேரியில் நவீனமயமாக்கப்பட்ட நூலகத்தை முதலமைச்சர் நாராயணசாமி திறந்து வைத்தார்.
ரூ.2 கோடியில் புதுப்பிக்கப்பட்ட பழமையான நூலகம் : முதல்வர் நாராயணசாமி திறந்து வைத்தார்
x
புதுச்சேரியில் நவீனமயமாக்கப்பட்ட நூலகத்தை முதலமைச்சர் நாராயணசாமி திறந்து வைத்தார். பழமையான இந்த நூலகம், தேசிய நூலக வளர்ச்சித் திட்டத்தின் கீழ்  2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கடந்த ஓர் ஆண்டாக புதுப்பிக்கும் பணிகள்  நடைபெற்று வந்தன. இந்நிலையில் பணிகள் நிறைவடைந்து  முதல்வர் நாராயணசாமி தலைமையில் திறப்பு விழா நடைபெற்றது.  நவீனமயமாக்கப்பட்ட இந்த நூலகத்தில் பார்வையைற்றோர் கணினி மூலம் பயன்பெறும் புதிய வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.  விழாவில் பேசிய முதல்வர்  இந்த நூலகத்தில் தமிழ், பிரெஞ்சு  உள்ளிட்ட பல்வேறு மொழிகளை சேர்ந்த 4 லட்சத்திற்கும் மேற்பட்ட முக்கிய புத்தகங்கள் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்