கோயில் பிரசாதம் சாப்பிட்ட பெண் பலி : 12 பேர் மருத்துவமனையில் அனுமதி
கர்நாடகாவில், கோயில் பிரசாதம் சாப்பிட்ட பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிக்கபள்ளாப்பூரை அடுத்த சிந்தாமணியில் உள்ள கங்கம்மா கோயிலில் கேசரிபாத் பிரசாதமாக வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில், கோயில் பிரசாதம் சாப்பிட்ட பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிக்கபள்ளாப்பூரை அடுத்த சிந்தாமணியில் உள்ள கங்கம்மா கோயிலில் கேசரிபாத் பிரசாதமாக வழங்கப்பட்டுள்ளது. இதை சாப்பிட்ட கவிதா என்ற பெண் உயிரிழந்தார். மேலும் மயக்கமடைந்த 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக அர்ச்சகர் மற்றும் கோவில் அறக்கட்டளை நிர்வாகியை, கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story