ரயிலில் சிக்க இருந்த முதியவரை காப்பாற்றிய போலீஸ்காரர் : சன்மானம் வழங்க ரெயில்வே முடிவு

ரயிலில் சிக்க இருந்த முதியவரை காப்பாற்றிய போலீஸ்காரர் : சன்மானம் வழங்க ரெயில்வே முடிவு
ரயிலில் சிக்க இருந்த முதியவரை காப்பாற்றிய போலீஸ்காரர் : சன்மானம் வழங்க ரெயில்வே முடிவு
x
கர்நாடகாவில் ரயிலுக்கு அடியில் சிக்க இருந்த முதியவரை காப்பாற்றிய ரயில்வே போலீஸ்காரருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அங்குள்ள ஒசப்பேட்டை ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் ஏற முயன்ற முதியவர் போது எதிர்பாராதவிதமாக கால் தவறி, ரயிலுக்கு அடியில் சிக்க இருந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த ரயில்வே போலீஸ்காரர் ஹரீசா, துரிதமாக செயல்பட்டு அந்த முதியவரை காப்பாற்றினார். இந்த சம்பவம் அனைத்தும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் அந்த ரயில்வே போலீஸ்காரரின் செயலுக்கு பாராட்டு தெரிவித்தனர். அவரின் செயலுக்கு தென்மேற்கு ரெயில்வே பொது மேலாளர் அஜய்குமார் சிங் பாராட்டி தெரிவித்து உள்ளதோடு, ஹரீசாவுக்கு சன்மானம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்