"மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தை ஹேக் செய்யலாம்" - முன்னாள் பொறியாளர் பரபரப்பு தகவல்

இந்திய தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுப்பு
மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தை ஹேக் செய்யலாம் - முன்னாள் பொறியாளர் பரபரப்பு தகவல்
x
2014 தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முடக்கப்பட்டதாக முன்னாள் பொறியாளர் சையத் சுஜா வெளியிட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவில் வசித்து வரும் ஹைதராபாத்தைச் சேர்ந்த சையத் சுஜா என்பவர், காணொலி காட்சி டெல்லியில் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார். மின்னணு வாக்குப்பதி இயந்திரங்களை தயாரித்த நிறுவனத்தில் தான் பணி புரிந்ததாக கூறிய அவர், டெல்லி சட்டசபை தேர்தலில், மின்னணு இயந்திரத்தை ஹேக் செய்ய சிலர் முயன்றதாகவும், அதனை தங்கள் அணி முறியடித்ததாகவும் கூறினார். 
இதனிடையே, மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தை யாராலும் ஹேக் செய்ய முடியாது என்றும், அதில் முழுநம்பிக்கை உள்ளதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்