சபரிமலை ஐயப்பன் கோயில் பக்தர்கள் தரிசனம் இன்று இரவுடன் நிறைவடைகிறது

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளையுடன் மண்டல, மகர விளக்கு காலம் நிறைவடைகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயில் பக்தர்கள் தரிசனம் இன்று இரவுடன் நிறைவடைகிறது
x
சபரிமலை ஐயப்பன் கோயிலில்  நாளையுடன்  மண்டல, மகர விளக்கு காலம் நிறைவடைகிறது. இதனைத்தொடர்ந்து நாளை காலை நடை சாத்தப்படும். இன்று இரவு 10  மணிக்கு மாளிகைப்புறத்தம்மன் கோயில் வளாகத்தில் உள்ள மணி மண்டபத்தில் குருதிபூஜை நடைபெறுகிறது. அதன் பின்னர் பக்தர்களுக்கு தரிசனம் கிடையாது.நாளை காலை 6.30 மணிக்கு பந்தளம் மன்னர் பிரதிநிதி ராகவவர்மா முன்னிலையில் கோயில் நடை அடைக்கப்பட்டதும்,  திருவாபரணங்கள் அடங்கிய பெட்டி பந்தளத்துக்கு கொண்டு செல்லப்படும். மாசிமாத பூஜைகளுக்காக பிப்ரவரி 12-ம் தேதி மீண்டும், சபரிமலை கோயில் நடை திறக்கப்படவுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்