சபரிமலைக்கு செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்...
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல காத்திருந்த 2 பெண்களை போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர்
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல காத்திருந்த 2 பெண்களை போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர். நிலக்கல் பகுதிக்கு சென்ற அவர்களை தடுக்க, பம்பையில் ஏராளமான பக்தர்கள் திரண்டுள்ளதால் திரும்பி செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். இதனிடையே கடந்த வாரம் கோயிலுக்கு சென்ற போது தடுத்து நிறுத்தப்பட்ட இரு பெண்கள் சபரிமலை செல்வதற்காக மீண்டும் இன்று வந்திருந்தனர். அவர்களை நீலிமாலா பகுதியில் தடுத்து நிறுத்திய போலீசார், திருப்பி அனுப்பி வைத்தனர்.
Next Story