வரும் 20 ஆம் தேதி தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்

பட்ஜெட் தயாரிக்கும் பொறுப்பு அமைச்சர் பியூஷ் கோயலிடம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து அவரின் தமிழக வருகை 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வரும் 20 ஆம் தேதி தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்
x
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள நிலையில் பட்ஜெட் தயாரிக்கும் பொறுப்பு அமைச்சர் பியூஷ் கோயலிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த பொறுப்புகளின் காரணமாக நாளை தமிழகம் வர இருந்த பியூஷ் கோயலின் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக அவர் 20 ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் வரும் பியூஷ் கோயல், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் ஆகியோர் சென்னையில் இல்லாததால் அவர்களுடனான கூட்டணி பேச்சுவார்த்தை அடுத்த கட்ட வருகையின் போது இருக்கும் என பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்