பாத யாத்திரையை நிறைவு செய்தார் ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திரா​வில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி 3 ஆயிரம் கிலோ மீட்டர் நடை பயணத்தை நிறைவு செய்துள்ளார்.
பாத யாத்திரையை நிறைவு செய்தார் ஜெகன்மோகன் ரெட்டி
x
ஆந்திரா​வில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி 3 ஆயிரம் கிலோ மீட்டர் நடை பயணத்தை நிறைவு செய்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மக்களை சந்திக்கும் தனது நடை பயணத்தை தொடங்கிய ஜெகன் மோகன் ரெட்டி, 13 மாதங்களில் ஆந்திராவில் உள்ள 134 தொகுதிகளுக்கு நடைபயணமாக சென்று 2 கோடி மக்களை சந்தித்த‌தாக தெரிவித்துள்ளார். ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள இச்சாபுரம் என்ற பகுதியில் இன்று தனது யாத்திரையை நிறைவு செய்தார். அங்கு ஜெகன்மோகன் ரெட்டிக்கு, உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள், செல்பி எடுத்தும் பரிசுகள் வழங்கியும் மகிழ்ந்தனர். இதன் மூலம், இந்தியாவிலே அதிக தூரம் நடை பயணம் சென்ற அரசியல் தலைவர் என்ற சாதனையை அவர் தனதாக்கி கொண்டுள்ளார். இதற்கு முன் 2003 ஆம் ஆண்டில், ஆந்திர முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடுவை தோற்கடிப்பதற்காக ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தை ராஜசேகர ரெட்டி, பிரம்மாண்ட நடைபயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்