காட்டு யானை தாக்கியதில் வனத்துறை அதிகாரி உயிரிழப்பு

ஊருக்குள் புகுந்த காட்டு யானை தாக்கிய வனத்துறை அதிகாரி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காட்டு யானை தாக்கியதில் வனத்துறை அதிகாரி உயிரிழப்பு
x
ஊருக்குள் புகுந்த காட்டு யானை தாக்கிய வனத்துறை அதிகாரி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு, ஆந்திர எல்லையோரம் உள்ள நோலாகிரி கிராமத்துக்குள் யானைகள் நுழைந்தாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு சென்ற வனத்துறை அதிகாரிகள், யானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திரும்பி வந்த ஒரு யானை மாரப்பா என்ற வனத்துறை அதிகாரியை பலமாக தாக்கியது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். ஆந்திரா, கர்நாடகா, 
தமிழ்நாடு ஆகிய 3 மாநில எல்லையில் உள்ள அந்த பகுதியில்  யானைகள் தாக்கி தொடர் உயிரிழப்பு ஏற்படுவதாக அப்பகுதியினர் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்