சித்தூர் காவல் நிலையத்துக்குள் புகுந்த சிறுத்தை : 13 மணி நேரத்துக்கு பின் பிடிபட்டது

ராஜஸ்தான் மாநிலம் சித்தூரில் ஒரு காவல் நிலைய வளாகத்தில் சிறுத்தை புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சித்தூர் காவல் நிலையத்துக்குள் புகுந்த சிறுத்தை : 13 மணி நேரத்துக்கு பின் பிடிபட்டது
x
ராஜஸ்தான் மாநிலம் சித்தூரில் ஒரு காவல் நிலைய வளாகத்தில் சிறுத்தை புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இங்குள்ள கோட்வலி காவல் நிலைய வளாகத்துக்குள் புகுந்த சிறுத்தை, அங்குள்ள புதர் பகுதியில் பதுங்கிக் கொண்டதால் காவலர்களும் பொதுமக்களும் அச்சம் அடைந்தனர். பின்னர் தகவல் அளிக்கப்பட்டு வந்த வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கும் முயற்சிகளில் இறங்கினர். சுமார் 13 மணி நேரம் பீதியிலாழ்த்திய சிறுத்தை பிடிக்கப்பட்டதும் மக்கள் நிம்மதி அடைந்தனர். வனத்துறையினர் அந்த சிறுத்தையை வனத்துக்குள் விட எடுத்துச் சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்