எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் பின்னடைவு : மாநிலங்களவை ஜன. 2 - க்கு ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக, முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேற்றப்படவில்லை.
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் பின்னடைவு : மாநிலங்களவை ஜன. 2 - க்கு ஒத்திவைப்பு
x
முத்தலாக் தடை மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, முத்தலாக் மசோதாவை தேர்வு குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யின் தீர்மானத்திற்கு, ஆதரவாக, அதிமுக, திமுக உள்ளிட்ட 11 கட்சிகள் கையெழுத்திட்டு மாநிலங்களவையில் வழங்கி உள்ளன. இதே கருத்தை, வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி.க்களும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவை, அடுத்தது இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.  

Next Story

மேலும் செய்திகள்