நாளை விண்ணில் ஏவப்படுகிறது ஜிசாட்-7A செயற்கைகோள் - இஸ்ரோ தலைவர் சிவன்

ஜி சாட் 7ஏ செயற்கை கோள், நாளை விண்ணில் ஏவப்படுகிறது.
நாளை விண்ணில் ஏவப்படுகிறது ஜிசாட்-7A செயற்கைகோள் - இஸ்ரோ தலைவர் சிவன்
x
நாளை ஜிசாட் 7A செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில், இஸ்ரோ தலைவர் சிவன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிவன், இஸ்ரோ சார்பில் 35 நாட்களில் மூன்றாவது செயற்கைக் கோள் ஏவப்படுவதாகவும் இது பெரும் சாதனை என்றும் பெருமிதம் தெரிவித்தார். விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்காக,.  ஐ .ஆர். டி. எஸ். எஸ். என்னும் செயற்கைக்கோள் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அதற்கான திட்டம் தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்