பிரம்மோற்சவ விழா - கஜ வாகனத்தில் எழுந்தருளினார் பத்மாவதி தாயார்...

அலமேலுமங்காபுரம் பத்மாவதி கோவில் பிரம்மோற்சவத்தின் மிக முக்கிய நாளான நேற்று, கஜ வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளினார்.
பிரம்மோற்சவ விழா - கஜ வாகனத்தில் எழுந்தருளினார் பத்மாவதி தாயார்...
x
திருப்பதியை அடுத்துள்ள அலமேலுமங்காபுரம் பத்மாவதி கோவில் பிரம்மோற்சவத்தின் மிக முக்கிய நாளான நேற்று, கஜ வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளினார். இதற்காக திருமலை ஏழுமலையான் கோயிலில், மூலவருக்கு அணிவிக்கப்படும் தங்க லட்சுமி காசு மாலை அலமேலுமங்காபுரத்திற்கு கொண்டு வரப்பட்டு பத்மாவதி தாயாருக்கு அணிவிக்கப்பட்டது. முன்னதாக,  மஞ்சள் மண்டபத்தில் தங்க லட்சுமி காசு மாலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.  இவ்விழாவில் கோலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Next Story

மேலும் செய்திகள்