புதுச்சேரி அரசு சார்பில் ரூ.3.15 கோடி நிவாரண நிதி - பினராயி விஜயனிடம் வழங்கினார் நாராயணசாமி

புதுச்சேரி அரசு சார்பில் ரூ.3.15 கோடி நிவாரண நிதியை பினராயி விஜயனிடம் வழங்கினார் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி.
புதுச்சேரி அரசு சார்பில் ரூ.3.15 கோடி நிவாரண நிதி - பினராயி விஜயனிடம் வழங்கினார் நாராயணசாமி
x
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலம் வரலாறு காணாத மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண நிதி கேரளாவுக்கு வந்து குவிந்தது .  இந்நிலையில் திருவனந்தபுரத்தில் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்த, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, நிவாரண நிதியாக 3.15 கோடி ரூபாயை வழங்கினார்.முன்னாள் அமைச்சர் வல்சராஜ், சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் ஆகியோரும் நாராயணசாமி உடனிருந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்