ஹைதராபாத்தில் அதிரடிபடை சோதனை : ஹவாலா பணம் ஏழரை கோடி ரூபாய் சிக்கியது

ஹைதராபாத்தில் பிடிபட்டுள்ள கணக்கில் வராத ஏழரை கோடி ரூபாய் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹைதராபாத்தில் அதிரடிபடை சோதனை : ஹவாலா பணம் ஏழரை கோடி ரூபாய் சிக்கியது
x
தெலங்கானா மாநில சட்டப்பேரவைக்கு டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் ஓட்டுக்காக பணம் கொடுக்கும் நபர்களை பிடிக்க தேர்தல் ஆணையம் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பறக்கம் படையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடிக்கப்பட்டது. கணக்கில் வராத 7 கோடியே 51 லட்சம் ரூபாய் பணத்தை அதிரடி படையினர் கைப்பற்றி உள்ளனர்.

இதுதொடர்பாக 4 பேரை கைது செய்த போலீஸார் தேர்தலுக்காக பணம் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டிருந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். தெலுங்கானா மாநிலத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை  53 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில தேர்தல் அதிகாரி ரஜத்குமார் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்