குடும்பத்துக்கு 2 குழந்தை திட்டம் - அமல்படுத்த கோரிய மனு தள்ளுபடி

குடும்பத்துக்கு 2 குழந்தைகள் திட்டத்தை அமல்படுத்த கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
குடும்பத்துக்கு 2 குழந்தை திட்டம் - அமல்படுத்த கோரிய மனு தள்ளுபடி
x
குடும்பத்துக்கு 2 குழந்தைகள் திட்டத்தை அமல்படுத்த கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதுதொடர்பாக தொடரப்பட்ட பொதுநல மனுவில்,  2 குழந்தைகள் மட்டும் பெற்றுக்கொள்பவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்க வேண்டும் என்றும், 2 குழந்தைகளுக்கு மேல் பெறுபவர்களுக்கு அரசின் எந்த சலுகையும் வழங்கக்கூடாது" என்றும்  குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது. இந்த கோரிக்கையை அரசு நிர்வாகத்திடம் எடுத்துச் செல்லுமாறு மனுதாரருக்கு நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்