ராஜபக்சேவுக்கு பிரதமருக்கு உரிய ஆசனம் - நாடாளுமன்றத்தில் வழங்க இலங்கை சபாநாயகர் ஒப்புதல்
இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்கிரமசிங்கே நீக்கப்பட்டு புதிய பிரதமராக ராஜபக்சே பதவி ஏற்றதும், அரசியல் சிக்கல்களுக்கு, ஜனநாயக முறையில் தீர்வு காணுமாறு சபாநாயகர் கரு ஜயசூரியா தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு உரிய ஆசனத்தை ராஜபக்சேவுக்கு வழங்க கரு ஜயசூரிய ஒப்புக் கொண்டுள்ளார். இலங்கை அரசிதழில் பிரதமராக மஹிந்த ராஜபக்ஸவின் பெயர் வெளியிடப்பட்டு இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story