சர்தார் வல்லபாய் படேலின் பிரமாண்ட உருவச்சிலை - திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
உலகிலேயே மிக உயரமான சிலை என்ற பெருமையை பெற உள்ள, சர்தார் வல்லபாய் படேலின் பிரம்மாண்ட சிலையை, பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்.
குஜராத் மாநிலம், கெவாடியா மாவட்டத்தில் உள்ள சர்தார் சரோவர் அணையில், இந்த 597 அடி உயர சிலை உருவாக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 990 கோடி ரூபாய் செலவில், 2 ஆயிரத்து 500 தொழிலாளர்கள் இந்த பிரம்மாண்ட சிலையை கட்டியுள்ளனர். இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் படேலுக்கு தங்க நிறத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை, ஒற்றுமைக்கான சிலை என பெயரிடப்பட்டுள்ளது. சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளான இன்று , உலகிலேயே மிக உயரமான அவரது சிலையை, பிரதமர் நரேந்திர மோடி
திறந்து வைக்கிறார்.
Next Story

