சர்தார் வல்லபாய் படேல் சிலை நாளை திறப்பு
இந்தியாவின் இரும்புமனிதர் என வர்ணிக்கப்பட்டசர்தார் வல்லபாய் படேலின் மிக உயரமான சிலையை பிரதமர் நரேந்திரமோடி நாளை புதன்கிழமை திறந்து வைக்கிறார்.
குஜராத் மாநிலம் நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணை அருகே 597 அடி உயரத்தில் சர்தார் வல்லபாய் படேலின் முழு உருவச்சிலை நிறுவப்பட்டு உள்ளது. ஒற்றுமையின் சிலை என பெயரிடப்பட்டு உள்ள உலகிலேயே மிக உயரமான இந்த சிலையை, பிரதமர் நரேந்திரமோடி திறப்பதையொட்டி, பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூவும், மாஃ பா பாண்டியராஜனும், பங்கேற்கிறார்கள்.
Next Story