பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து - செல்போனில் பதிவான பதற வைக்கும் காட்சிகள்
கர்நாடகாவில் சரக்கு லாரி ஒன்று தாறுமாறாக ஓடிய காட்சிகள் செல்போனில் பதிவாகி உள்ளன.
பெங்களூருவில் இருந்து பெல்காம் சென்ற அந்த லாரியை அபிஷேக் என்பவர் ஓட்டியுள்ளார். இரவு முழுவதும் உறங்காததால், தூக்க கலக்கத்தில் அபிஷேக் இருந்துள்ளார். இதனால், மங்கள்புரா என்ற இடத்தின் அருகே சென்றபோது, தாறுமாறாக லாரி ஓடத் தொடங்கியது. பின்னர், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுனர் லேசான காயமடைந்தார். இதற்கிடையே, லாரி தாறுமாறாக ஓடிய பரபரப்பு காட்சிகளை இரு சக்கர வாகன ஓட்டிகள் சிலர் செல்போனில் படம் பிடித்துள்ளனர். அதை தற்போது பார்க்கலாம்...
Next Story