மும்பை குடிசைப் பகுதியில் தீ விபத்து : வீடுகள் எரிந்து நாசம்

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள லால்மதி பகுதியில் உள்ள குடிசைப் பகுதிகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
மும்பை குடிசைப் பகுதியில் தீ விபத்து : வீடுகள் எரிந்து நாசம்
x
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள லால்மதி பகுதியில் உள்ள குடிசைப் பகுதிகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீ மளமளவென பரவியதால், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு 9 தீயணைப்பு வாகனங்களில் விரைந்த வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்தால், அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்