மத்திய அமைச்சர் அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டு : "பிரதமர் மோடியின் மவுனம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது"

மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து பிரதமர் மவுனம் சாதிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது என காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
மத்திய அமைச்சர் அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டு : பிரதமர் மோடியின் மவுனம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது
x
மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து பிரதமர் மவுனம் சாதிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது என காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா, பெண்கள் மீதான பாலியல் புகார் தொடர்பான மீடூ பிரச்சனையில் தமது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டியது பிரதமரின்  தார்மீக கடமை என்று தெரிவித்துள்ளார்.ஒருபுறம் பெண் குழந்தை பாதுகாப்பு பற்றி பேசும் பிரதமர் மறுபுறம் இந்த பிரச்சினையில், வாய் திறக்காமல் மவுனம் காப்பது சந்தேகத்தை எழுப்புவதாக உள்ளது என்று ஆனந்த் சர்மா குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசுக்கு தலைமை வகிப்பவர் என்ற நிலையில், அனைவருக்கும் தெரியும் வகையில் பிரச்சினைக்கான முடிவை பிரதமர் அறிவிக்க வேண்டும் என்றும் ஆனந்த் சர்மா வலியுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்